மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகாவில் உள்ள பருந்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு நாளை(ஜன.14) செல்ல கலெக்டர் தினேசன் தடை விதித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாளை மகர விளக்கு பூஜை என்பதால் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அதைக்காண பருந்துபாறை,பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குவிய வாய்ப்புள்ளது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல கலெக்டர் தடை விதித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE