பெரியகுளம் : பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயிலில் மார்கழி திருப்பாவை வழிபாடு நடந்து வருகிறது.
கூடாரவல்லி பூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளியை சடகோபராமானுஜ ஜீயர் கொண்டு வந்து வெங்கடாஜலபதிக்கு அணிவித்தார். உலக நன்மைக்காக சிறப்பு பூஜை செய்தார். கோயில் பராமரிப்புக்குழுவினர் கோலப்போட்டி நடத்தினர். சிறுவர்கள், சிறுமிகள் ஆண்டாள், பெருமாள் வேடமணிந்து மாறுவேடப்போட்டியில் பங்கேற்றனர். சடகோபராமானுஜய ஜீயர் மற்றும் பெரியகுளம் ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் கவுரவ ஆலோசகர் சி.சரவணன்- சித்ரா தம்பதியினர் 60 பக்தர்களுக்கு பரிசு வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE