மூணாறு : மூணாறில் இக்கா நகரில் பொதுப்பணித்துறையினருக்குச் சொந்தமான நிலத்தை ராஜா என்பவர் ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடத்தினார். அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அகற்றினர்.
அதேபோல் நகரில் நல்லதண்ணி ரோட்டில்தனியார் தங்கும் விடுதியில் அனுமதியின்றி கட்டுமான பணிகளை உரிமையாளர் அப்பாஸ் நடந்தினார். அதனை மூணாறு சிறப்பு வருவாய்த்துறை அலுவலக ஆய்வாளர் ஜான்சன், ஊராட்சி செயலர் அஜித்குமார், கிராம நிர்வாக அலுவலர் சித்திக் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.ரோடு மற்றும் ஓடை ஆகியவற்றின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளதாக கூறி விடுதிசெயல்பட தற்காலிகமாக தடை விதித்தனர்.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE