மூணாறு : கேரளா மூணாறு அருகே மாட்டுப்பட்டி எஸ்டேட் ஆர் அன்ட் டி பகுதியில் வீட்டின் ஜன்னல்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
மூணாறு அருகில் உள்ளகன்னிமலை, மாட்டுப்பட்டி ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் குட்டியுடன் பெண் காட்டு யானை கடந்த இரு மாதங்களாக வலம் வருகின்றன. அவை கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் உள்ள கன்னியம்மன் கோயில் சுவரை ஒரு மாதத்திற்குள் இரு முறை சேதப்படுத்தியது. அவை நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஜெயகனி என்பவரது வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்தின. அவரது குடும்பத்தினர் வீட்டினுள் அச்சத்துடன் பதுங்கி உயிர் தப்பினர்.-------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE