போடி : போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் 26. இரண்டு நாட்களுக்கு முன் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் திரும்பவில்லை. பெற்றோர் தேடி பார்த்த போது சுந்தரராஜபுரம் - சில்லமரத்துப்பட்டி ரோட்டில் அரிவாளால் வெட்டுப்பட்டு இறந்து கிடந்தார்.
போடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை மேற்கொண்டதில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் போடி அம்மாபட்டியை சேர்ந்த பிரபு 28, என்பர் ரவிக்குமாரை கொலை செய்தது தெரிந்தது. போலீசார் பிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE