வேடசந்துார் : வாங்கிய கடனுக்கு ஆளைக் கடத்தி மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில், கடன் கொடுத்தவர்கைது செய்யப்பட்டார்.
தாடிக்கொம்பு உண்டார்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால் 42. கூலித்தொழிலாளியான இவர், திருகம்பட்டி கவிதா 45, என்பவரிடம் ரூ.40ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பு காலத்தில் வேலையின்றி இருந்ததால் முறையாக கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் வட்டியுடன் சேர்த்து ரூ. ஒரு லட்சம் தரவேண்டும் என கவிதா கேட்டுள்ளார்.தரமுடியாத நிலையில் அவரை கவிதா உள்ளிட்ட சிலர், கடத்திச் சென்று மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிய நந்தகோபால் வேடசந்துார் போலீசில்புகார் கொடுத்தார். கவிதாவை கைது செய்த போலீசார், மேலும் சிலரைதேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE