கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி முதியவர் இறந்தார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்,70;
இவர், நேற்று காலை 11.30 மணியளவில் தனது வீட்டில் தண்ணீர் பிடிக்க மின் மோட்டார் ஒயரினை ஸ்விட்ச் போர்டில் சொருகியபோது திடீரென மின்சாரம் தாக்கிமயக்கமடைந்தார். உடன் ராமச்சந்திரனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே முதியவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE