கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக மேம்பாலம் ஒன்று நிறுவப்பட்டது.
அந்த பகுதியில், மழை நீர் வடி கால்வாய் அமைக்கப்படவில்லை.அந்த மேம்பாலத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட சுரங்கப்பாதை தாழ்வாக இருப்பதால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், குளம் போல் மழை நீர் தேங்குகிறது.அந்த சுரங்கப்பாதையில், பல நாட்களாக மழை நீர், குளம் போல் தேங்கி உள்ளது. அதை வெளியேற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், தாசில்தார் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்கள், இலங்கை அகதிகள் மற்றும் சிந்தலகுப்பம் கிராம மக்கள் என, தினசரி ஆயிரக்கணக்காக மக்கள், மேற்கண்ட பகுதியை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உடனடியாக தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். அப்பகுதியில், மழை நீர் வடி கால்வாய் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE