சின்னசேலம் : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சின்னசேலம் பகுதியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜையுடன் துவங்கி, அனுமனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இங்குள்ள ஆஞ்சநேயர் ஜந்து முகங்களை கொண்டு, குன்றின் மீது நின்றபடி காட்சியளிக்கிறார். இதேபோல், சின்னசேலம் பெருமாள் கோவில், செல்வமுருகள் கோவில் மற்றும் குரால், கூகையூர், கூட்ரோடு பகுதியிலுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE