திருவள்ளூர் : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூலவருக்கு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 32 அடி உயர மூலவர் ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. வெற்றிலை, துளசி மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.காக்களூரில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவிலில், காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.பின், மூலவருக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதே போல், சிவ - விஷ்ணு கோவிலிலும், அனுமன் ஜெயந்தி வழிபாடு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE