திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். கீழத்தாழலுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளமுருகு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். அ.தி.மு.க., ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகன், நிர்வாகிகள் மணிவண்ணன், தண்டபாணி, ஜோதிலிங்கம், கணேசன், சுந்தரம், தேவா, பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்முருகன், ரமேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE