பொன்னேரி : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, நிவாரணம் கேட்டு, போலீசாரின் தடையை மீறி, விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்கு, நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. கடந்த வாரம் பெய்த மழையால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் வேதனை அடைந்ததுடன், அவர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க கோரி, நேற்று, பொன்னேரி வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது.விவசாயிகள் பேரணியாக சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணிக்கு அனுமதிஇல்லை,
மீறினால் கைது செய்வோம் என, எச்சரித்தனர். இதனால், போலீசார் மற்றும் விவசாயி களிடையே வாக்குவதாதம் ஏற்பட்டது.போலீசாரின் எச்சிரிக்கை மற்றும் தடையை மீறி, விவசாயிகள் பேரணியாக சென்று, பொன்னேரி ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE