திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த கச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் ஒன்றியம், கச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் அதன் தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கை, பள்ளி பாதுகாப்பு, சுகாதாரம், பள்ளி கட்டமைப்பு வசதிகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் செந்தில்குமார், எட்டியான், சீதா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பள்ளியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE