சென்னை: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்கம் என்ற பெயரில், அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு, தலா, 600 மெகா வாட் திறனில், இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின், மின் தேவையை பூர்த்தி செய்கிறது. வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், பராமரிப்பு பணிக்காக, ஏற்கனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலக்கரி எடுத்து செல்லப்படும், 'கன்வேயர் பெல்டில்' ஏற்பட்ட பாதிப்பால், இரண்டாவது அலகிலும், நேற்று முன்தினம் முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE