ஈரோடு: போகி பண்டிகைக்காக பூலப்பூ, ஆவாரம் பூ, வேப்பிலை கட்டு விற்பனை, ஈரோட்டில் சுறுசுறுப்பாக நடந்தது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று, போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற மொழிக்கேற்ப, வீடு, கடை, கட்டடங்கள், வாகனங்களை சுத்தம் செய்வர். தவிர, வீடு, கட்டடம், வாகனங்களில் வேப்பிலை, ஆவாரம் பூ, பூலப்பூ போன்றவற்றை சேர்த்து காப்பு கட்டுவர். இதற்காக, ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, நேதாஜி சாலை, சூரம்பட்டி நான்கு ரோடு, சம்பத் நகர், மோட்டூர் ரோடு போன்ற மக்கள் கூடும் பகுதிகளில், வேப்பிலை, ஆவாரம் பூ, பூலப்பூ போன்றவற்றை, சாலையோரங்களில் நேற்று கடை அமைத்து விற்பனை செய்தனர். மூன்று கட்டு, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்தனர். மஞ்சள் குலை, மூன்று கீற்று, 30 முதல், 60 ரூபாய், உதிர்ந்த மஞ்சள், 250 கிராம், 40 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE