ஈரோடு: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு இடையே, உச்சநீதிமன்றம் குழு அமைத்து, இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம், என கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 49 நாட்களாக டில்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். மத்திய அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை. விவசாயிகளின் குரலை ஏற்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு, விவசாயிகளிடம் முழுமையான விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை எடுக்கும் என நம்புவோம். ஒரு சட்டம் கொண்டு வரும் முன், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், சர்வாதிகார போக்கில், மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது நல்லதல்ல. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE