ஈரோடு: மொபட் மீது சரக்கு ஆட்டோ உரசியதில், பெண் பலியானது, ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு, முனிசிபல் காலனி, அம்மன் நகரை சேர்ந்த, ஆறுமுகம் மனைவி அன்னகொடி, 55; திண்டலில் இருந்து ஈரோட்டுக்கு, யமஹா ரே மொபட்டில், நேற்று காலை சென்றார். செங்கோடம்பள்ளம் அருகே, முந்திச்சென்ற சரக்கு ஆட்டோ, மொபட் மீது லேசாக உரசியது. இதில் நிலை தடுமாறி அன்னகொடி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்தார். அப்பகுதிவாசிகள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விபத்து ஏற்படுத்திய சரக்கு ஆட்டோவை, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE