சேலம்: சேலம், கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்ட அளவில், மக்கள் குறைதீர் கூட்டம், முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், 3ம் தளத்தில், வரும், 19 மாலை, 4:00 மணிக்கு நடக்க உள்ளது. இதனால், அஞ்சல் தொடர்பான குறை, புகார் இருப்பின், அன்று தெரிவிக்கலாம். தபால் மூலமும், கண்காணிப்பாளருக்கு, 18க்குள் அனுப்பி வைக்கலாம். அஞ்சல் உறை மீது, 'லோக் அதாலத்' என குறிப்பிடவும். மணியார்டர், விபிபி., விபிஎல்., பதிவு, விரைவு தபால் குறித்த புகாரில், அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண் உள்ள அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு அனுப்பவும். சேமிப்பு கணக்கு, அஞ்சல் காப்பீடு புகார் எனில், கணக்கு, பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்படும் விபரங்களை தெளிவாக குறிப்பிடவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE