பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பேரூராட்சியில், புகையில்லா பொங்கல் கொண்டாட, விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். காந்தி நகர், பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், வீடுகள், கடைகளில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகித்தனர். அப்போது, போகிப்பண்டிகையில், டயர், பிளாஸ்டிக், பழைய பொருட்களை எரிக்கக்கூடாது. பொது இடங்களில், குப்பை கொட்ட, எரிக்கவோ கூடாது. பேரூராட்சி பணியாளர் வரும்போது, மட்கும், மட்காத குப்பையை, தனித்தனியாக பிரித்து வழங்க, மக்களிடம் அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE