சேலம்: சேலம், மணியனூர், நாட்டாமங்கலம் பிரதான சாலையில் உள்ள, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று முன்தினம், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத, 1.07 லட்சம் ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி மீது வழக்குப்பதிந்த போலீசார், பணம் கைமாறியது குறித்து, எட்டு புரோக்கர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE