மேட்டூர்: கொளத்தூரை சேர்ந்தவர் முரளி, 38. நேற்று காலை, 9:00 மணிக்கு, மேட்டூரில் இருந்து, பைக்கில் கொளத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். குள்ளவீரன்பட்டி வளைவை கடந்தபோது, மூன்று பேர், கத்தியை காட்டி, ரவுடிகள் எனக்கூறி மிரட்டி, முரளியிடம், 3,000 ரூபாயை பறித்துக்கொண்டனர். அவர் புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரித்ததில், ஓமலூர், கருப்பணம்பட்டி செல்வகுமார், 27, முத்துநாயக்கன்பட்டி செம்மண்கூடல் காந்தி, 24, குஞ்சாண்டியூர் அனீஷ்கார்த்திக், 24, ஆகிய ரவுடிகள் என, தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE