ஆத்தூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆத்தூர், ராணிப்பேட்டை சாலையில் உள்ள தனியார் நகை கடையில், நேற்று முன்தினம், கூட்டமாக இருந்தது. அப்போது, நகை வாங்குவதுபோல் வந்த ஒரு மூதாட்டி, அரை பவுன் தோட்டை திருடியதாக, கடைக்காரர் புகார்படி, ஆத்தூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அதில், சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த, வரதராஜன் மனைவி பாஞ்சாலி, 65, தான் எடுத்து வந்த 'கவரிங்' தோட்டை வைத்துவிட்டு, அதேபோல் இருந்த, அரை பவுன் தங்க தோட்டை எடுத்துச்சென்றது, அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது. ஏற்கனவே, அதேபோல், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு நகை கடையில் திருடிய வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பாஞ்சாலியை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE