தர்மபுரி: தர்மபுரியில், சேதமான நிலையில் உள்ள, குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி, பை பாஸ் சாலையில், பிடமனேரி பிரிவு சாலை மற்றும் கந்தசாமி வாத்தியார் தெருக்களுக்கு குடிநீர் வழங்க, நகராட்சி நிர்வாகம் சார்பில், குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, காலையில், இங்குள்ள குடியிருப்பு மற்றும் கடைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மூன்று மாதத்துக்கு முன், இந்த குழாய் பழுதானது. இதனால், நாள்தோறும் ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, சேதமான நிலையில் உள்ள குழாயை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE