ஓசூர்: ஓசூரில், குட்டையில் அழுகிய நிலையில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. ஓசூர், அலசநத்தம் பகுதியிலுள்ள குட்டையில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அழுகிய நிலையில் சடலமாக மிதப்பதாக, ஆவலப்பள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்திக்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது புகாரின்படி, ஹட்கோ போலீசார் சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என, ஹட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE