குளித்தலை: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, ஆர்ச்சம்பட்டி குடியிருப்பை சேர்ந்த, கூலி தொழிலாளியின், 16 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். இதே பகுதியை சேர்ந்த முதியவர் காளிமுத்து, 65, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அவ்வப்போது கடையில் இருந்து மிட்டாய் வாங்கி கொடுத்து, தன் வீட்டிற்கு அழைத்து சென்று பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் மதியம், சிறுமியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற சமயத்தில், சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து, தன் வீட்டில் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, முதியவர் காளிமுத்துவை, இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து, கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE