சங்ககிரி: மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன், தமிழகத்தில் முதல்முறை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே, ஓட்டல் வளாகம் உள்ளது. அங்கு, 50 கிலோ வாட் திறன் கொண்ட, மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வரின் மைத்துனர் வெங்கடாஜலம், சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா ஆகியோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதுகுறித்து, ஸ்டேஷன் நிறுவனர் கார்த்திகேயன் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறை, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே, 50 கிலோவாட் திறன் கொண்ட மின்வாகன சார்ஜ் ஸ்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. டீசலை காட்டிலும் பணம் மிச்சமாகும். இங்கு, வாகனத்தை, 20 முதல், 40 நிமிடத்தில், வாடிக்கையாளர் சார்ஜ் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE