நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளியில், சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த கட்டட ?தொழிலாளியை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை சேர்ந்தவர், ரூசேந்திரன், 19. கட்டட தொழிலாளியான இவர், கடந்த, 6ல், 16 வயது சிறுமியை, கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். தகவலின்படி நாட்றம்பள்ளி போலீசார் சிறுமியை மீட்டு, போக்சோவில் ரூசேந்திரனை நேற்று கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி, திருப்பத்தூர் மகளிர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE