பள்ளிபாளையம்: ஆனங்கூர், காடச்சநல்லூர் பகுதியில் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இழப்பீடு வழங்க கோரி, வயலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் அருகே, காடச்சநல்லூர், சின்ன ஆனங்கூர் பகுதியில், உயர் மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிலத்திற்கான இழப்பீட்டை அரசாணை 54/2020ன் படி, உயர்த்தி வழங்க வேண்டும். மரம், பயிர்களுக்கான நிலுவை தொகை வழங்க வேண்டும். போர்வெல், கிணறு ஆகியவற்றிற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று போராட்ட குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் செல்லமுத்து, சுப்பிரமணி, பாலகுமார், சின்னுசாமி, வள்ளியம்மாள், பெருமாயி, ராஜம்மாள், பழனிசாமி, முருகேசன், குலசேகரன், ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE