குளித்தலை: தோகைமலை பஸ் ஸ்டாண்டில், தே.மு.தி.க., மாவட்ட விவசாய அணி, மேற்கு ஒன்றியம் சார்பில், 500 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. குளித்தலை அடுத்த, தோகைமலை பஸ் ஸ்டாண்டில் நேற்று, தே.மு.தி.க., மாவட்ட விவசாய அணி மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில், செங்கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன். தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதி முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். 500 பேருக்கு மாவட்ட செயலாளர் தங்கவேல், பொங்கல் தொகுப்பு வழங்கி பேசினார். குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் ரங்கநாதன், தாமரை செல்வி கதிர்வேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் பேரூர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், சரவணகுமார், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், ஒன்றிய அவைத்தலைவர் தவசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE