கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகேயுள்ள, ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம், மூலம் நட்சத்திரம் நாளில், அனுமன் ஜெயந்தி விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள, அனுமன் கோவிலில் மூலவருக்கு, 16 வகையான வாசனை திரவியங்கள் மூலம், சிறப்பு அபி?ஷகம் மற்றும் லட்சார்ச்னை நடந்தது. தொடர்ந்து மூலவர் அனுமனுக்கு, வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மஹா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.
* க.பரமத்தி அருகில், குட்டக்கடை அனுமந்தராய பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அனுமந்தராயசாமிக்கு, வெண்ணை சாத்து, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE