கரூர்: மாயனூர் கதவணை மற்றும் அம்மா பூங்கா சாலை பகுதியில், புதிதாக தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. மேலும், கரூர்-திருச்சி, நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கதவணை மேல் சாலையும் போடப்பட்டுள்ளது. கதவணை அருகே உள்ள பழைய பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளது. அதை தவிர கதவணையில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக அம்மா பூங்கா கட்டப்பட்டுள்ளது. மாயனூர் கதவணையை பார்க்க, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கதவணை மற்றும் அம்மா பூங்காவுக்கு செல்லும் சாலை மண் சாலைகளாக குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஜனவரி துவக்கத்தில், தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. ஆனால், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சாலை பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது, ஒப்பந்த பணிகளை வழக்கம் போல், மேற்கொள்ளலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், மாயனூர் கதவணை மற்றும் அம்மா பூங்கா பகுதியில் தார்ச்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE