கரூர்: வரும், 15, 26, 28 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும், 15, குடியரசு தினத்தை வரும், 26, வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, 28 என, மூன்று நாட்களில் டாஸ்மாக், இணைந்த மதுக்கூடங்கள், ஓட்டல்களுடன் இணைந்த மதுபான கூடங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி, விற்பனை செய்பவர்கள் மீது, தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE