நான் அதிர்ஷ்டசாலி!
ஒரு பெரிய மற்றும் முக்கியமான இடத்திற்கு வரவேண்டும் என்பதே, என் லட்சியமாக இருந்தது. எனினும், இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஆவேன் என, ஒருநாளும் கனவு கண்டதில்லை. இதனால், நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.
வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி
சங்கடமாக உள்ளது!
டில்லி எல்லையில் நடந்துவரும் போராட்டத்தில், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் தியாகம் செய்ததற்கு, மோடி அரசு வருந்தவில்லை. எனினும், குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தது, மத்திய அரசுக்கு பெரும் சங்கடமாக உள்ளது.
ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்.,
துாண்டுகின்றனர்!
புதிய வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகள் என்ன என்பது கூட, சரியாக சொல்லத் தெரியாமல், எல்லைப் பகுதியில், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண முன்வராத விவசாயிகளை யாரோ துாண்டுகின்றனர்.
ஹேமமாலினி
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE