கூடலுார் : மசினகுடி பால் உற்பத்தியாளர்களுக்கு, ஊக்க தொகையாக, 3.15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மசினகுடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி, மசினகுடி சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஆவின் தலைவர் அமைச்சர் மில்லர், பொது மேலாளர் ஈஸ்வரன், துணைப்பதிவாளர் (பால்வளம்) கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்று, 352 பால் உற்பத்தியாளர்களுக்கு, 3.15 லட்சம் ரூபாய் ஊக்க தொகை,3 உறுப்பினர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில், சங்க செயலாளர் ஜெயிகாஷ், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE