வால்பாறை : வால்பாறையில், இணைப்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரை ஒட்டியுள்ள நல்லகாத்து எஸ்டேட் தொழிலாளர்கள், 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஸ்டேன்மோர் மருத்துவமனைக்கு, வால்பாறை நகர் வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.இந்நிலையில், இரு எஸ்டேட் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்,ஆற்றின் குறுக்கே, நகராட்சி சார்பில் எட்டு ஆண்டுகளுக்கு முன், நல்லகாத்து - ஸ்டேன்மோர் இடையே சிறிய அளவிலான இணைப்பு பாலம் கட்டப்பட்டது. இதனால், இரண்டு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களும் பயனடைந்தனர்.தற்போது, இந்த பாலம் இடிந்து விழும் நிலையில் பக்கவாட்டு பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே வால்பாறை நகராட்சி சார்பில் இரண்டு எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, பாலத்தை சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE