வால்பாறை : வால்பாறையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக, மாத இறுதியில் ஒரு நாள் மின் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறையில் சாரல் மழை மட்டுமே பெய்யும் நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில், கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பு இன்றி பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில், எஸ்டேட் பகுதியில் நீண்ட நேரம் மின் தடை ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகல் நேரத்தில் 'ஆன்லைன்' வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிடிப்பை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE