உடுமலை : உடுமலை அமராவதி அணையிலிருந்து, கடந்தாண்டு, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, வரும், பிப்., 2 வரை வழங்கப்படுகிறது. அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, ராஜவாய்க்கால் பாசன நிலங்கள், தாராபுரம், கரூர் பகுதியிலுள்ள பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில், நெல் சாகுபடி செய்யப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், நடவு செய்த நெல் நாற்றுக்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. நெற்கதிர் மணிகளுடன், நெல் காட்சியளிக்கும் நிலையில், உடுமலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடை துவக்க முடியாத சூழல் உள்ளது.
பொங்கலுக்குப்பின், வயல்களில் நீர் தேங்குவது குறைந்ததும், இயந்திரம் வாயிலாக, கல்லாபுரம், ராமகுளம் உள்ளிட்ட பாசன பகுதிகளில், அறுவடை துவங்கும், என விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE