மடத்துக்குளம் : மடத்துக்குளம் பா.ஜ., சார்பில், ஆயிரம் நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வினியோகிக்கப்பட்டது.
பா.ஜ., வின் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, மக்களுக்கான நலத்திட்டங்களை வீடு தோறும் தேடிச்சென்று வழங்கி வருகின்றனர். இது தவிர, மக்களை ஈர்க்கும் பல்வேறு பிரசாரங்களும் நடத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, மடத்துக்குளம் ஒன்றியம் பா.ஜ., சார்பில், கிராமங்கள் தோறும் கொடியேற்று விழாவும், மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஒன்றியத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
கணியூர், கடத்துார், ஜோத்தம்பட்டி பகுதியில் வசிக்கும், ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.இதோடு, கிராமப்பகுதியில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, பா.ஜ., கொள்கைகள் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்டத்தலைவர் பொன் ருத்ரகுமார், துணைத்தலைவர் வடுகநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE