திருப்பூர் : இரண்டு கால்களையும் இழந்து தவித்த மாற்றுத்திறனாளிக்கு, ஊராட்சி தலைவர் உதவி வழங்கினார்.
பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார், 35. மாற்றுத்திறனாளியான இவர் இரண்டு கால்களையும் இழந்து நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் பழனிசாமி குமாருக்கு உதவ முன்வந்தார்.அவரது வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யும் வகையில் அதே பகுதியில் பெட்டிக்கடையும், அதற்கான மூல பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குமார் குடும்பத்தினர் மற்றும் வார்டு உறுப்பினர் தேவி ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE