பொங்கலுார் : பொங்கலுார் பகுதியில், கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் தக்காளிகள் அழுகுகின்றன.
செடிகளில் இலைகள் வறண்டும், பூக்கள் உதிர்ந்தும் கருகியது போல் காணப்படுகிறது. அறுவடை துவங்கிய உடனே செடிகள் காய்ப்புத் திறனை இழந்து விட்டன.மழையில் பெரும்பகுதி பழங்கள் அழுகி விட்ட நிலையில், மீதமாகும் பழங்களுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. 'தக்காளி செடிக்கு பராமரிப்பு செய்வது வீண் வேலை,' என்பதால் விவசாயிகள் உழவு ஓட்டி அழித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE