பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில், கிராம கண்காணிப்பு காவலர் நியமனம் செய்யும் விழா நடந்தது.
மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், கிராம கண்காணிப்பு காவலர்களின் பணி மற்றும் அவர்கள் பொது மக்களிடையே எவ்வாறு பழக வேண்டும்; பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் காவலர்களின் பங்கு ஆகியவை குறித்து விளக்கினார். பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம கண்காணிப்பு அலுவலர்களாக, எஸ்.ஐ.,க்கள் செல்வநாயகம், ரவீந்திரன், அகமது, தம்புராஜ், புவனேஸ்வரன், கோகுல், பொன்னுபாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE