சூலுார் : சுல்தான்பேட்டை அருகே தனியார் நிறுவன மேலாளரை குத்திக்கொன்ற வாலிபர், போலீசுக்கு பயந்து விஷம் குடித்தார்.
சுல்தான்பேட்டை அடுத்த எஸ்.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ஜான், 62. தனியார் நிறுவன மேலாளர். இவர், நேற்று முன் தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணையில், குமாரபாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், சார்லஸ் ஜானின் இளைய மகளை ஒரு தலையாக காதலித்து வந்ததும், பெண்ணிடம் அடிக்கடி போனில் பேசியதும் தெரிந்தது. சார்லஸிடம் மகளை திருமணம் செய்து தரும்படி வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்து வந்ததும் தெரிந்தது.
நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த சார்லஸிடம், கார்த்திக் வாக்குவாதம் செய்து, ஆத்திரமடைந்து அவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்து தப்பியுள்ளார். மேலும், போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. தகவலறிந்த நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் மற்றும் உடந்தையாக இருந்த டேவிட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சையில் உள்ள வாலிபருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE