பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே கார் கவிழ்ந்து இருவர் காயமடைந்தனர்.
கவுண்டம்பாளையம் அருகே உள்ள சங்கனுாரை சேர்ந்தவர் ஹரிஷ், 20. இவர் மேட்டுப்பாளையத்தில் தனது காரை சர்வீஸ் செய்து கொண்டு, நண்பர் முத்துக்குமாருடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி அருகே வந்தபோது, அவருடைய காருக்கு முன்னே சென்றுகொண்டிருந்த இன்னொரு கார், வலதுபுறம் திடீரென திரும்பியதால், ஹரிஷின் கார் எதிர்பாராதவிதமாக தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், முத்துகுமார், ஹரிஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE