அன்னுார் : அன்னுார் ஒன்றியத்தில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம் துவங்கியது. அன்னுார் தெற்கு துவக்கப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியை ஜீவலதா மற்றும் ஆசிரியைகள் பாட புத்தகங்களை வினியோகித்தனர்.தலைமையாசிரியை கூறுகையில், ''புதிதாக முதல் வகுப்பில், 21 மாணவர்களும், மற்ற வகுப்புகளில் 9 பேரும் என, 30 பேர் சேர்ந்துள்ளனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை, 83 ஆக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டுக்கான நோட்டு, புத்தகம், நான்கு செட் சீருடை, புத்தக பை, கலர் பென்சில் என, அனைத்து விலையில்லா பொருட்களும் வழங்கப்பட்டு விட்டன,'' என்றார்.ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளிலும், மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE