பேரூர் : தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பேனர்களால், வாகன ஓட்டிகள் பேஜாராகி உள்ளனர்.
தமிழகத்தில் பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளனது. அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, ரோட்டோரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பேனர் வைக்கப்படுகிறது.தற்போது, தேர்தல் காலம் என்பதால், பேனர் வைப்பது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், காணும் இடம் எல்லாம் கட் - அவுட்கள் காட்சியளிக்கின்றன.
குறிப்பாக, பேரூர் - சிறுவாணி, மாதம்பட்டி - தொண்டாமுத்துார் ரோட்டோரங்களில், பிரமாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.அதில், சில மிகவும் வளைவான இடத்தில், எதிர்புறத்தில் இருந்து வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளன. அதனால், விபத்து அபாயம் உள்ளது.பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சியினர் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE