பேரூர் : கோவையில் ஆவாரம், பூளைப்பூ விற்பனை அமோகமாக நடந்தது.தீத்திபாளையம், கரடிமடை, சென்னனுார் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் இருந்து ஆவாரம், பூலப்பூக்களை பறித்து வந்த வியாபாரிகள், ரோட்டோரங்களில் விற்பனை செய்தனர். வெளிப்பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வந்திருந்த வியாபாரிகள், பறித்து சென்று நகரில் விற்பனை செய்தனர். ஆவாரம் பூ கட்டு, ரூ. 20க்கும், பூளைப்பூ கட்டு, ரூ. 25க்கும் விற்பனை செய்யப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கோவை நகரில் இதை விட பத்து ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE