கோவை : ரேஸ்கோர்ஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட, 100 சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் துவக்கி வைத்தார்.
கோவை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில், 100 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான துவக்க விழா மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், பல்சமய நல்லுறவுகுழு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், உமா, குணசேகரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE