கோவை : கோவை பூசாரிபாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த, 49 ஆண்டுகளாக பூசாரிபாளையம் ஓம்சக்தி நகரில் வசித்து வருகிறோம். ஆரம்ப காலங்களில், கவுலிபிரவுன் சாலையில் வசித்த எங்களுக்கு, அப்போதைய கலெக்டர் இவ்விடத்தை தேர்வு செய்து வழங்கினார். இவ்விடத்திற்கு முறையாக வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தியுள்ளோம். பல முறை கோரிக்கை வைத்தும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் இவ்விடத்தை காலி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். மாநகராட்சி தரப்பில் தற்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். நாங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் வசிக்கவில்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE