பேரையூர் : தொடர் மழையால் பேரையூர் தாலுகாவில் சூளைகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலுகாவில் வண்டாரி, சிலைமலைபட்டி, சாப்டூர், சூலப்புரம், மள்ளபுரம், எஸ்.கீழப்பட்டியில் 300 செங்கல் சூளைகள் உள்ளன. மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.4க்கு விற்கப்பட்ட ஒரு செங்கல், தற்போது ரூ.6.50 ஆக உயர்ந்துஉள்ளது. செங்கல் தேவை அதிகரித்து காணப்படும் நிலையில், உற்பத்தி செய்யமுடியாத நிலையில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனையுற்றனர். சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE