சென்னை:தென்காசி மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு, விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சார் - பதிவாளராக பணிபுரிந்தவர், எஸ்.பாலு. தமிழ்நாடு சார் - பதிவாளர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.கடந்த, 2019ல், மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். இதன்பின், தென்காசி மாவட்ட பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தென்காசி பதிவு மாவட்டத்துக்கு உட்பட்ட, கோவில் நிலங்கள் குறித்த விபரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளியிட, பாலு பிறப்பித்த உத்தரவு பலராலும் பாராட்டப்பட்டது. இவர், விருப்ப ஓய்வில் செல்ல முடிவு செய்து, பதிவுத்துறை வாயிலாக, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.இவரது கோரிக்கையை ஏற்று, ஜன., 15ல், இவரை பணியில் இருந்து விடுவிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE